உள்ளூர் செய்திகள்

இரும்பாலை அருகே பிளம்பர் மர்மச்சாவு

Published On 2022-12-24 10:27 GMT   |   Update On 2022-12-24 10:27 GMT
  • சேலம் அருகே உள்ள பெருமாம்பட்டி அடுத்த வலியங்காடு ஓங்காளியம்மன் கோவில் அருகில் வசித்து வருபவர் இவர் பிளம்பராக வேலை செய்து வந்தார்.
  • இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் செம்மண் திட்டு அருகே சாலையோரத்தில், தலையில் ரத்த காயங்களுடன் லோகநாதன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் சென்ற மோட்டார் சைக்கிளும் அருகிலேயே கிடந்தது.

சேலம்:

சேலம் அருகே உள்ள பெருமாம்பட்டி அடுத்த வலியங்காடு ஓங்காளியம்மன் கோவில் அருகில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவரது மகன் லோகநாதன் (வயது 31). பிளம்பராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில், வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் லோகநாதன் வெளியே சென்றுள்ளார். ஆனால் இன்று காலை வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.

பிணமாக மீட்பு

இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் செம்மண் திட்டு அருகே சாலையோரத்தில், தலையில் ரத்த காயங்களுடன் லோகநாதன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் சென்ற மோட்டார் சைக்கிளும் அருகிலேயே கிடந்தது.

இது குறித்த தகவலின் பேரில், இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த லோகநாதன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக இறந்து போன லோகநாதனின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கொலையா?

இதில், லோகநாதன் குடும்பத்தினருக்கு ஏற்கனவே நிலப்பிரச்சினை இருந்து வந்ததாகவும், முன்விரோதம் காரணமாக யாராவது அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் கூறினர். இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், லோகநாதன் எவ்வாறு இறந்தார், அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News