உள்ளூர் செய்திகள்

பேரணியை பேரூராட்சிமன்ற தலைவர் அஞ்சுகம்கணேசன் தொடங்கி வைத்தார்.

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2022-06-18 10:25 GMT   |   Update On 2022-06-18 10:25 GMT
  • திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
  • பள்ளி மாணவ மாணவிகள் பேரூராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. செயல் அலுவலர் ஆனந்தன், பேரூராட்சி துணைத்தலைவர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை பேரூராட்சிமன்ற தலைவர் அஞ்சுகம்கணேசன் தொடங்கி வைத்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கினார். மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் தரம் பிரித்து மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்தும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கியும் கையில் பதாகைகளுடன் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பள்ளி மாணவ மாணவிகள் பேரூராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News