உள்ளூர் செய்திகள்

ஈரோடு வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்

Published On 2023-01-16 15:39 IST   |   Update On 2023-01-16 15:39:00 IST
  • இன்று அதிகாலை முதல் பழனிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை யாக சென்றனர்.
  • சிறுவர் சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை வயது பேதம் இன்றி அனைவரும் நடந்து சென்றனர்.

ஈரோடு, 

தைப்பூச விழா அடுத்த மாதம் பிப்ரவரி 5-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பழனிக்கு ஆயிரகணக்கான மக்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக சென்ற வண்ணம் உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளிலிருந்து கடந்த சில நாட்களாக பழனிக்கு நூற்றுக்கண க்கான மக்கள் பாதயாத்திரையாக சென்ற வண்ணம் உள்ளனர்.

இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி, தாரமங்கலம், ஓமலூர், மகுடஞ்சாவடி, சங்ககிரி மற்றும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் வெப்படை போன்ற பகுதிகளில் இருந்து இன்று அதிகாலை முதல் பழனிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.

சிறுவர் சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை வயது பேதம் இன்றி அனைவரும் நடந்து சென்றனர்.

இன்று வழக்கத்தை விட பனி கடுமையாக இருந்தது. எனினும் பனியை பொறுப்படுத்தாமல் மக்கள் பாதயாத்திரையாக சென்ற வண்ணம் இருந்தனர்.

இதனால் இன்று ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சோதனை சாவடி முதல் பன்னீர்செல்வம் பார்க் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது.

பாதயாத்திரை சென்ற மக்கள் காளிங்கராயன் வாய்க்காலில் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் பாதயாத்திரை செல்லும் மக்களுக்கு வழி நெடுகிலும் ஆங்காங்கே அன்னதானமும், குடிநீர் பாட்டிலும் மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டன. 

Tags:    

Similar News