உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே குவியல் குவியலாக கொட்டி வைக்கப்பட்டுள்ள ஆற்று மணல்: போலீசாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Published On 2023-08-18 09:23 GMT   |   Update On 2023-08-18 09:23 GMT
  • இன்று அதிகாலை தூக்கணாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர்.
  • 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் அடுத்த இரண்டாயிரம் விளாக பகுதியில் தென்பெண்ணையாறு உள்ளது. இந்த பகுதியில் இருந்து மாட்டுவண்டிகள் மூலம் மணல் திருடிச் சென்று தங்கள் வீடு உள்ள பகுதிகளில் கொட்டுவைக்கின்றனர். பின்னர் வாகனங்கள் மூலமாக மணல் கடத்தப்பட்டு வருவதாகவும் தூக்கணாம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று அதிகாலை தூக்கணாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். வீடுகள் முன்பாக ஆற்று மணல் குவியல் குவியலாக இருந்தது.

இந்த மணலை 2 வாகனங்களில் ஏற்றும் பணியில் ஒரு சிலர் ஈடுபட்டு வந்தனர். மினி லாரி, மர்ம நபர்களை பிடிக்க போலீசார் முயன்ற போது பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். போலீசாரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் தப்பியோடினர். இதையடுத்து மணல் ஏற்றிக் கொண்டிருந்த 2 மினி லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தூக்கணாம்பாக்கம் போலீசார், புதுவை மாநிலம் கொம்பாக்கம் வேல்முருகன், குருவிநத்தம் நடராஜன் உள்ளிட்ட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் வீடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ள மணலை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News