உள்ளூர் செய்திகள்
போலியான தகவல்களை பரப்பும் இ-சேவை மையங்களின் அனுமதி ரத்து செய்யப்படும்-கலெக்டர் எச்சரிக்கை
- சாதி சான்றிதழை புகைப்படத்துடன் கூடிய சான்றிதழாக வருகிற 16-ந்தேதிக்குள் மாற்றி கொள்ள வேண்டும் என்று தகவல் பரவி வருகிறது.
- போலியான தகவல்களை பரப்பும் இ-சேவை மையங்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசின் சின்னத்துடன் வாட்ஸ்-அப்பில் அரசின் புதிய ஆணைப்படி பழைய மற்றும் புகைப்படம் இல்லாமல் இருக்கும் சாதி சான்றிதழை புகைப்படத்துடன் கூடிய சான்றிதழாக வருகிற 16-ந்தேதிக்குள் மாற்றி கொள்ள வேண்டும் என்று தகவல் பரவி வருகிறது.
இதுபோன்ற எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை. இதுபோன்ற போலியான தகவல்களை பரப்பும் இ-சேவை மையங்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.