உள்ளூர் செய்திகள்

சுகாதாரமற்ற நிலையில் காணப்படும் மாசாகாடு பயணிகள் நிழலகம்.

பேராவூரணி மாசாகாடு பயணியர் நிழற்குடை சீரமைக்க வலியுறுத்தல்

Published On 2022-12-04 15:16 IST   |   Update On 2022-12-04 15:16:00 IST
  • தற்போது இந்த இடம் சாலை உயர–மாகவும், பயணிகள் நிழலகம் பள்ளமான இடத்திலும் உள்ளது.
  • இரவு நேரங்களில் மதுபிரியர்கள் மது அருந்தும் கூடாரமாகவும் விளங்குகிறது.

பேராவூரணி:

பேராவூரணியில் இருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் மெயின் சாலையில் (முசிறி-சேதுபாவாசத்திரம்) மாசாகாடு என்ற இடத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது.

கடந்த 2013-14 ம் ஆண்டு பழுதுபார்க்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. தற்போது இந்த இடம் சாலை உயரமாகவும், பயணிகள் நிழலகம் பள்ளமான இடத்திலும் உள்ளது. இதனால் மழை பெய்தால் சாலையிலிருந்து மழை நீர் பஸ் நிறுத்ததிற்குள் புகுந்து விடுகிறது.

மேலும் இரவு நேரங்களில் மதுபிரியர்கள் மதுஅருந்தும் கூடாரமாகவும் விளங்குகிறது. மதுவை அருந்திவிட்டு பாட்டில்களையும், குப்பைகளையும் இந்த பஸ் நிறுத்தத்தில் வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இந்த இடம் சுகாதாரமற்றதாகவும், குப்பைகளுடனும் காணப்படுவதால் பஸ்சில் செல்ல வரும் பெண்கள், பயணிகள் பஸ் நிறுத்தத்திற்குள் செல்ல அச்சப்படுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தை பார்வையிட்டு சுத்தம் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு–வர வேண்டும் என சமூக ஆர்வலர்களும், கிராம பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News