உள்ளூர் செய்திகள்

நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

Published On 2023-10-19 08:26 GMT   |   Update On 2023-10-19 08:26 GMT
டிப்பர் லாரி மோதி விவசாயி பலி

பெரம்பலூர்,  

பெரம்பலூர் அருகே பேரளி கிராமத்தை சேர்ந்த வர் பிரபாகரன் (வயது 38). விவசாயியான இவர் இரு சக்கர வாகனத்தில் பெர ம்பலூர் சென்றார்.

எறையூர் பிரிவு பாதை இடதுபுறம் நுழையும்போது பின்னால் வந்த டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில் துடிதுடித்து அதே இடத்தில் பிரபாகரன் உயிரிழந்தார்.

இதனை அறிந்த பிரபா கரன் மனைவி ரம்யா மற் றும் உறவினர்கள் அதிவேக மாகவும் அதிக பாரம் ஏற்றி வரும் டிப்பர் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவே ண்டும். க.எறையூரில் இயங்கும் கல்குவாரிகளை மூட வேண்டும். இறந்த நபரின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்க வேண் டும் என கோரிக்கை களை வலியுறுத்தி அரியலூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த பெரம்பலூர் டிஎஸ்பி பழனிசாமி மறிய லில் ஈடுபட்டோர்க ளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறியதின் பேரில் சாலை மறியலில் கைவிட்டு சென்றனர்

Tags:    

Similar News