உள்ளூர் செய்திகள்

ஆசிரியையிடம் தாலி செயின் பறித்த 2 வாலிபர்கள் கைது

Published On 2023-10-15 12:13 IST   |   Update On 2023-10-15 12:13:00 IST
அரியலூர் குபேர நகரில் நடந்து சென்ற

குன்னம்,  

அரியலூர் குபேர நகை சேர்ந்தவர் சுபாஷினி(வயது 42). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பள்ளி முடிந்து அவர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் அவரின் தாலி சங்கிலியை பறித்து சென்று உள்ளனர்.

இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் செயின் பறித்த பெரம்பலூர் வேப்பந்தட்டை பாலையூர் நவீன்குமார்(23), திருச்சி தென்னூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மகன் தான்ஸ்ரீ என்கிற தரணி(18) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News