உள்ளூர் செய்திகள்

விரக்தியில் இளம்பெண் தற்கொலை

Published On 2023-04-03 14:37 IST   |   Update On 2023-04-03 14:37:00 IST
  • திருமணமாகி நான்கு வருடங்கள் ஆன நிலையில் தற்கொலை
  • ஆர்டிஓ விசாரணை நடைபெறுகிறது

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் மனைவி சிவரஞ்சனி (வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் ராஜகோபால் அடிக்கடி மது அருந்திவிட்டு வருவதால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிவரஞ்சனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவரஞ்சனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மருவத்தூர் போலீசார் ராஜகோபாலை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். மேலும் திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் இவ்வழக்கு குறித்து மேல் விசாரணைக்காக பெரம்பலூர் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News