உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2022-08-18 09:39 GMT   |   Update On 2022-08-18 09:56 GMT
  • ராகவன், 10ம்வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார்.
  • தற்போது அச்சிறுமி கார்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, மருதடி குன்னுமேடு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் ராகவன் (20).டிராக்டர் டிரைவர்.

இவர் 10ம்வகுப்பு படிக்கும் மாணவியை கடந்த இரண்டுஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாகவும், இதனால் தற்போது அச்சிறுமி கார்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து ராகவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News