உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2022-07-19 14:21 IST   |   Update On 2022-07-19 14:21:00 IST
  • கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • 260 கிராம் கஞ்சாைவ பறிமுதல் செய்தனர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்பேரில் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் சூப்பிரண்டு கணேசன் தலைமையில் தனிப்படை அமைத்து குன்னம், வேப்பூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் சோதனை நடத்தினர். அப்போது நன்னை கிராமத்தில் கஞ்சா விற்றவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர், அதே பகுதியை சேர்ந்த வேலாயுதத்தின் மகன் முருகானந்தம்(வயது 24) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து, அவரிடம் இருந்து சுமார் 260 கிராம் கஞ்சாைவ பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். இதையடுத்து தனிப்படை போலீசாரை சூப்பிரண்டு பாராட்டினார்."

Tags:    

Similar News