உள்ளூர் செய்திகள்

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

Published On 2022-09-30 07:21 GMT   |   Update On 2022-09-30 07:21 GMT
  • சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • சிறுமியின் தாய் கொடுத்த புகாரில் நடவடிக்கை

பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே 14 வயது சிறுமியை கற்பழித்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் இந்திரா நகர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காங்கு மகன் கார்த்திக் (வயது 27). இவர் கடந்த 23-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை வலுகட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிந்து கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News