உள்ளூர் செய்திகள்

அகரம்சீகூர் அருகே தீபாவளி கொண்டாட வந்த தொழிலாளி வெள்ளாற்றில் பிணமாக மீட்பு

Published On 2022-10-26 14:42 IST   |   Update On 2022-10-26 14:42:00 IST
  • ஜெயக்குமார் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திட்டக்குடியில் உள்ள தனது வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
  • நேற்று இரவு வெளியில் சென்ற ஜெயக்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை.

பெரம்பலூர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு உட்பட்ட வதிஷ்டபுரம் பாட்டை தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 45). இவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராஜாமணி என்ற மனைவியும், ரேவதி என்ற மகளும், குணா என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திட்டக்குடியில் உள்ள தனது வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் வெள்ளாற்றில் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளாற்றில் இடுப்பளவு தண்ணீர் ஓடுகின்றது. இந்நிலையில் நேற்று இரவு வெளியில் சென்ற ஜெயக்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இதற்கிடையே அவர் வெள்ளாற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த குன்னம் காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து இறந்து போன வாலிபர் குடிபோதையில் இருந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News