உள்ளூர் செய்திகள்
பெரம்பலூரில் பெண்கள் ஆர்ப்பாட்டம்
- பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- கண்களில் கருப்பு துணி கட்டி பெண்கள் கலந்து கொண்டனர்
பெரம்பலூர்,
பெண்களுக்கு எதிரான தொடர் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட மகளிர் பாசறை சார்பில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நூர்ஜஹான் தலைமை தாங்கினார். மகளிர் பாசறை மாவட்ட செயலாளர் செல்லம்மாள், இணைச் செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் தமிழகத்தில் பெண் குழந்தைகள், பெண்கள் மீதும் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் பாலியல் வன் கொடுமைகள் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பெண்கள் பணியிட பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மகளிர் பாசறையினர் தங்களது கண்களில் கருப்பு துணியை கட்டி கொண்டு கோஷங்களை எழுப்பினர்.