உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி பெண் பலி

Published On 2022-09-22 14:53 IST   |   Update On 2022-09-22 14:53:00 IST
  • வாகனம் மோதி பெண் பலியானார்
  • உறவினர் வீட்டிற்கு சென்ற போது விபரீதம்

பெரம்பலூர்:

அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் நகர்பகுதி சங்குப்பேட்டை அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் கண்ணையன். இவரது மனைவி தனம் ( வயது 55). இவர் நேற்று வேப்பந்தட்டை தாலுக்கா அயன் பேரையூரில் உள்ள சமத்துவபுரத்தில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றார். பிறகு பெரம்பலூர் திரும்பி செல்வதற்காக பஸ் ஏற பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக தனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தனத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியின் மூலம் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தனம் பரிதாபமாக உயிர் இருந்தார். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News