உள்ளூர் செய்திகள்

மங்களமேட்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை 

Published On 2023-01-05 15:13 IST   |   Update On 2023-01-05 15:13:00 IST
  • மங்களமேட்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
  • போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

அகரம்சீகூர்:

அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு மெயின் ரோடுவை சேர்ந்த சுரேஷ் இவரது மனைவி தையல் நாயகி (வயது 45)இவர்களது மகள் ரேஷ்மா (வயது 14). இவருக்கு தோல் அலர்ஜியின் காரணமாக கடந்த 8-மாதத்திற்க்கு முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்து விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக தையல் நாயகி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தையல் நாயகியின் கணவர் சுரேஷ் தனது இளையமகள் ஜெயஸ்ரீ என்பவரை சென்னையில் உள்ள விடுதியில் சென்று விட்டு விட்டு காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள மின்விசிறியில் சுடிதாரால் தூக்கு மாட்டி பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் மங்களமேடு காவல்துறையினர்க்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் மங்களமேடு காவல்துறையினர் நேரில் சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.


Tags:    

Similar News