உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் மொபட் மோதி பெண் பலி

Published On 2023-08-22 14:56 IST   |   Update On 2023-08-22 14:56:00 IST
  • மொபட் மோதி நடந்து சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்
  • பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

பெரம்பலூர் 

பெரம்பலூர் அருகே குரும்பலூர் தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி பார்வதி (வயது 42). இவா் பெரம்பலூர்-துறையூர் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது ஆலத்தூர் தாலுகா, காரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வல்லரசுவின் மகன் நல்லதம்பி (19) என்பவர் ஓட்டி வந்த மொபட் எதிர்பாராதவிதமாக பார்வதி மீது மோதியது. இதில் பார்வதியும், நல்லதம்பியும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பார்வதி பரிதாபமாக இறந்தார். நல்லதம்பிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News