உள்ளூர் செய்திகள்

கணவர் திட்டியதால் மனைவி தற்கொலை

Published On 2022-12-29 13:21 IST   |   Update On 2022-12-29 13:21:00 IST
  • கணவர் திட்டியதால் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
  • ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா ஆய்க்குடி தெற்குதெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி பொன்முடி (வயது 53). இவருக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்துள்ளது. இதனால் பொன்முடி அடிக்கடி மாத்திரை சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் பொன்முடி கடந்த ஒரு வாரமாக மாத்திரை சாப்பிடாமல் இருந்துள்ளார். இதை அறிந்த ராஜேந்திரன் பொன்முடியை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பொன்முடி வயலுக்கு வைத்திருந்த பூச்சிகொல்லி மருந்தை சாப்பிட்டுள்ளார். இதையடுத்து ெபான்முடிைய அக்கம் பக்கத்தினர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பொன்முடி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News