உள்ளூர் செய்திகள்

தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகள் புதுமுக வரவேற்பு விழா

Published On 2023-07-07 13:04 IST   |   Update On 2023-07-07 13:04:00 IST
  • தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகள் புதுமுக வரவேற்பு விழா நடைபெற்றது
  • முதலாமாண்டு மாணவிகள் அனைவரையும் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவிகள் இனிப்புக்களை வழங்கி உற்சாகத்துடன் வரவேற்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) முதலாம் ஆண்டு மாணவிகள் புது முக வரவேற்பு விழா தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி (தன்னாட்சி) முதல்வர் பேராசிரியர் உமாதேவி பொங்கியா மற்றும் புதுமுக மாணவிகள் குத்து விளக்கேற்றினர். தொடர்ந்து விநாயகர் பூஜை நடைபெற்றது. இதில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், புதுமுக மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து முதலாமாண்டு மாணவிகள் அனைவரையும் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவிகள் இனிப்புக்களை வழங்கி உற்சாகத்துடன் வரவேற்றனர். விநாயகர் பூஜை முடிந்தவுடன் புதுமுக மாணவிகள் அனைவரும் கல்லூரி மைதானத்தில் புதிய முயற்சி, புதிய சிந்தனை, பெற்றோர்களின் நம்பிக்கை போன்றவற்றை மனதில் நிறுத்தி, பலூன் காற்றில் உயர பறப்பது போல கல்வி பயணத்திலும், வாழ்விலும் தன்னம்பிக்கையுடன் உயர வேண்டும் என்ற உயர் சிந்தனையோடு உற்சாகத்துடன் வண்ண பலூன்களை பறக்கவிட்டனர். அதனை தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முதலாம் ஆண்டு மாணவிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தங்கள் வகுப்பறைக்கு சென்று தனது கல்லூரி பயணத்தை இனிதே தொடங்கினர்.

Tags:    

Similar News