உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு குழு கூட்டம் - கலெக்டர் பங்கேற்பு

Published On 2022-08-25 14:56 IST   |   Update On 2022-08-25 14:56:00 IST
  • நகர்ப்புற ஏழைகளுக்கு சிறந்த வாழ்க்கை நிலை, அடிப்படை வசதிகள் மற்றும் சாதகமான சூழலை உருவாக்குதல், அவர்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்த வேண்டும்.
  • கவுள்பாளையம் ஊராட்சியின் மூலம் சீரான மற்றும் சுகாதாரமான குடிநீர் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு குழுவின் முதல் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளதாவது-

துறைமங்கலம் குடியிருப்பு பகுதியில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலைவராகவும், நிர்வாக பொறியாளர் ஒருங்கிணைப்பாளராகவும், சட்டமன்ற உறுப்பினர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், நகராட்சி ஆணையாளர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், சமூக அறக்கட்டளை உறுப்பினர், குடியிருப்பு சங்க உறுப்பினர் உள்ளிட்ட 18 நபர்கள் அடங்கிய துறைமங்களம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.

504 குடியிருப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்காகவும், பராமரிப்பதற்காகவும், நிர்வகிப்பதற்காகவும் இக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற ஏழைகளுக்கு சிறந்த வாழ்க்கை நிலை, அடிப்படை வசதிகள் மற்றும் சாதகமான சூழலை உருவாக்குதல், அவர்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்த வேண்டும்.

கவுள்பாளையம் ஊராட்சியின் மூலம் சீரான மற்றும் சுகாதாரமான குடிநீர் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும். தெருவிளக்குகள், சாலை வசதிகள், கழிவு நீர் ஓடைகள் தேவையான இடங்களில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நீர் தேக்க தொட்டிகள் முறையாக சுத்தம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதியுதவி வழங்குவது அல்லது தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதியுதவி அளிக்கும் திட்டத்தினை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் இளம்பரதி, உதவி நிர்வாக பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் சங்கவி, கவுல் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன், மற்றும் பெரம்பலூர் மாவட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குழுவின் அனைத்து துறை சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News