உள்ளூர் செய்திகள்

குன்னம் அருகே வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி டிராவல்ஸ் ஏஜெண்ட் ரூ.2½ லட்சம் மோசடி; பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை

Published On 2023-02-16 15:12 IST   |   Update On 2023-02-16 15:13:00 IST
  • குன்னம் அருகே வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி டிராவல்ஸ் ஏஜெண்ட் ரூ.2½ லட்சம் மோசடி செய்ததால் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை செய்தார்
  • இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் போலீஸ் சரகத் திற்கு உட்பட்ட செட்டிகுளம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி மகன் சுந்தரபாண்டியன் (வயது 30). டிப்ளமோ சிவில் என்ஜி–னீயரிங் படித்துள்ள இவர் உள்ளூரில் போதிய வேலை கிடைக்காததால் வெளி–நாட்டு வேலைக்கு செல்ல முயற்சி மேற்கொண்டிருந்தார். இதற்காக பல்வேறு நிறுவனங்களுக்கு விண்ணப்பங்களும் அனுப்பி வந்தார். இதற்கிடையே தனது நண்பர் ஒருவரின் அறிவு–ரைப்படி செந்துறை அருகே சோழன்குடிக்காடு பகுதியை சேர்ந்த டிராவல்ஸ் ஏஜெண்டு பிரபாகரனை சுந்த–ரபாண்டியன் தொடர்பு கொண்டார். அவர் வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக உறுதி அளித்தார். இதைய–டுத்து சுந்தரபாண்டி–யனிடம் பிரபாகரன் ரூ.2 ½ லட்சத்தை பெற்றுக்கொண்டார். மேலும் 6 மாதத்தில் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகவும் உறுதி அளித்திருந்தார். ஆனால் பிரபாக–ரன் கூறியபடி சுந்தர–பாண்டியனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப–வில்லை. பலமுறை அவர் கேட்டும் உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பணத்தை திருப்பி தருமாறு சுந்தரபாண்டியன் கேட்ட–போது, பிரபாகரன் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தான் நடத்தி வந்த டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனத்தையும் மூடிவிட்டு தலைமறைவாகி விட்டார் இதேபோல் பலரிடம் பிரபாகரன் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியது தெரிந்து சுந்தர–பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து பணத்தை இழந்து தவித்து வந்த அவர் மன விரக்தியில் இருந்தார். நேற்று தனது வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத வயல்வெளி பகுதிக்கு சென்று அங்கு அரளி விதையை அரைத்து குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அங்கு வந்தவர்கள் சுந்தர–பாண்டியனை மீட்டு உடனடியாக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்தநிலையில் இன்று அதிகாலை சுந்தரபாண்டி–யன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தந்தை செல்வமணி கொடுத்த புகாரின்பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News