உள்ளூர் செய்திகள்
சுங்கச்சாவடி ஊழியர்கள் மண்டியிட்டு போராட்டம்
- சுங்கச்சாவடி ஊழியர்கள் மண்டியிட்டு போராட்டம் நடத்தினர்
- 42-வது நாளான நேற்று போராட்டம் தொடர்ந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த திருமாந்துறைறறறறயில் உள்ள சுங்கச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்கள் 28 பேரை பணியிடை நீக்கம் செய்த தனியார் ஒப்பந்த நிர்வாத்தை கண்டித்து கடந்த மாதம் 1-ந் தேதி முதல் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 42-வது நாளான நேற்று போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மண்டியிட்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்து, எங்களது கஷ்டங்கள் எப்போது தீரும் என்று கேட்பதுபோல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.