உள்ளூர் செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

Published On 2022-07-22 14:13 IST   |   Update On 2022-07-22 14:13:00 IST
  • வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை சம்பவத்தில் விசாரணை நடக்கிறது.
  • மகாலட்சுமிக்கு குழந்தை பிறந்து 9 மாதம் ஆவதால் தனது தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வருகிறார்.

பெம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பேரளி கிராமம் அரியலூர்- பெரம்பலூர் மெயின் ரோட்டில் வசிப்பவர் சசிகுமார். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 23). மகாலட்சுமிக்கு குழந்தை பிறந்து 9 மாதம் ஆவதால் தனது தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வருகிறார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு சென்ற சசிகுமார் அதன் பிறகு வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று விடியற்காலை சசிகுமார் வீட்டின் அருகே குடியிருக்கும் அவரது அண்ணி தமிழ்ச்செல்வி வெளியே வந்து பார்த்தபோது சசிகுமார் வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதையடுத்து, அவர் மகாலட்சுமிக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவை திறந்து 5 பவுன் செயின், 1 பவுன் தோடு, 1 ஜோடி கொலுசு மற்றும் ரூ.2,500 ஆகியவை திருடு போய் இருந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News