உள்ளூர் செய்திகள்

திருட்டு வழக்கில் தொடர்புடையவன் கைது

Published On 2022-10-06 14:19 IST   |   Update On 2022-10-06 14:19:00 IST
  • திருட்டு வழக்கில் தொடர்புடையவன் கைது செய்யப்பட்டார்
  • கேமரா பதிவை வைத்து நடவடிக்கை

பெரம்பலூர்:

பெரம்பலூரில் பாலக்கரையில் உள்ள தனியார் பர்னிச்சர் கடையில் கேஸ் லாக்கரை திருடி சென்ற குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில்அ டைக்கப்பட்டார்.

பெரம்பலூர் பாலக்கரை அருகே பிரபல தனியார் பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில் கடந்த 25-ந் தேதி இரவு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 2 பேர், கேஷ் லாக்கரை திருடிச்சென்றனர். அந்த லாக்கரில் ரூ 3.36 லட்சம் பணம் இருந்தது திருடு போனது.

இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்தினர். எஸ்பி மணி உத்தரவின்பேரில் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை , எஸ்.மலையானூரை சேர்ந்த கோவிந்தன் மகன் மணிகண்டன் சிறுவாச்சூர் பஸ் ஸ்டாப் அருகே சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூ1.70லட்சம் பணம் மற்றும் டூவிலரை கைப்பற்றினர்.

இதுகுறித்து பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிந்து குற்றவாளி மணிகண்டனை பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Tags:    

Similar News