உள்ளூர் செய்திகள்
காடூர் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம்
- காடூர் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பெரம்பலூர்:
அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் காடூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு விநாயகர், மாரியம்மன், பொன்னியம்மன், பூர்ணபுஷ்பகலாம்பிகா, சமேத படைகாத்த அய்யனார், செம்மலையப்பா, பூமலையப்பா, முத்தையா , ராகு. கேது, 27 நட்சத்திர லிங்கங்கள், 12 ராசி லிங்கங்கள், 9 கிரக லிங்கங்கள், அஷ்ட லிங்கங்கள், கருப்புசாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய நாளான நேற்று அதிகாலை மங்கள இசையுடன் சிறப்பு பூஜைகள் செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகள் காடூர் பரம்பரை அறங்காவலர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் குலதெய்வ காணியானர்கள், ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.