உள்ளூர் செய்திகள்

மங்களமேடு அருகே புள்ளிமான் சாவு

Published On 2023-06-08 06:01 GMT   |   Update On 2023-06-08 06:01 GMT
  • மங்களமேடு அருகே புள்ளிமான் இறந்தது
  • மங்களம் காப்புக்காட்டில் மானின் உடல் குழிதோண்டி புதைக்கப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்துள்ள ஒகலூர் கிழக்கு கிராமத்தில் உள்ள வாழை தோட்டத்தில் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது இறந்து கிடந்தது 2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மங்களம் காப்புக்காட்டில் மானின் உடல் குழிதோண்டி புதைக்கப்பட்டது.

Tags:    

Similar News