உள்ளூர் செய்திகள்
- கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா,பாடாலூர் அருகே உள்ளது கூத்தனூர் கிராமம்.இந்த கிராமத்தில் உள்ள சங்கிலியாண்டவர் சுவாமி கோயிலில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டி கெடா வெட்டி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.அதன்படி நடப்பாண்டு கூத்தனூர் காட்டுப்பகுதியில் உள்ள சங்கிலியாண்டவர் சுவாமி கோயிலுக்கு பொங்கல் வைத்தும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும், மழை பெய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு செய்தனர்.
முன்னதாக நாட்டா ர்மங்கலம் முத்தையா கோயில் செல்லும் சாலையில் உள்ள வெள்ளிமலை கிழக்கே உள்ள பாறையில் குடி அழைப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கூத்தனூர் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.