உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-02-07 14:45 IST   |   Update On 2023-02-07 14:45:00 IST
  • பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:


பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே ரஞ்சன்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உண்டு. இதில் மூத்த மகள் தமிழரசி(வயது 16) ரஞ்சன்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த தமிழரசி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் அங்கு சென்று தமிழரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தமிழரசி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News