உள்ளூர் செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

Published On 2023-03-24 06:51 GMT   |   Update On 2023-03-24 06:51 GMT
  • வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்துள்ளது
  • சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு

பெரம்பலூர்:

பெரம்பலூர் நகரில் பாரதி நகர் 2-வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பானுமதி (வயது 55). கணவர் இறந்துவிட்டார். மகன் கரூரில் பணிபுரிந்து வருகிறார். மகள் திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 16-ம் தேதி சென்னையில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்ற பானுமதி நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த ேபாது பீரோவில் இருந்த 7 பவுன் நகை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News