உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வேளாண்மை கல்லூரி தொடங்க கோரிக்கை

Published On 2022-10-17 15:20 IST   |   Update On 2022-10-17 15:20:00 IST
  • விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ள
  • பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வேளாண்மை கல்லூரி தொடங்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. இங்கு அனைத்து பருவத்திலும் அனைத்து வகை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டம் மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம் ஆகியவை உற்பத்தியில் தமிழகத்திலேயே முதலிடம் வகித்து வருகிறது. பால் உற்பத்தியிலும் தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளது.

மாவட்டத்தில் வேப்பந்தட்டையில் பருத்தி ஆராய்ச்சி மையம் உள்ளது. ஆனால் அடிப்படையில் முழுமையாக விவசாயத்தை தொழிலாக கொண்டுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வேளாண்மை கல்லூரி இல்லை என்பது அனைவரிடத்திலும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூரில் அரசு வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் என்று விவசாயிகளும், விவசாயிகள் சங்கங்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Tags:    

Similar News