உள்ளூர் செய்திகள்

செஞ்சேரியில் கிராமப்புற நூலகம் அமைக்க கோரிக்கை

Published On 2022-07-13 08:47 GMT   |   Update On 2022-07-13 08:47 GMT
  • செஞ்சேரியில் கிராமப்புற நூலகம் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்

பெரம்பலூர்:

பெரம்பலூரில் மக்கள் சக்தி இயக்கத்தின் கூட்டம் மாநில துணைத்தலைவர் பெரியசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை, கிளைகளை தொடங்குதல், இயக்க செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடமும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 2-வது இடமும் பெற்றமைக்கும், தேசிய திறனறி தேர்வில் பெரம்பலூர் மாவட்ட கல்வித்துறைக்கும், கல்வித்துறை அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்தும், செஞ்சேரியில் கிராமப்புற நூலகம் அமைக்க வேண்டும். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மீது 5 சதவீத விற்பனை மற்றும் சேவை வரிவிதிப்பை ரத்துசெய்ய வேண்டும். தாலுகா தலைநகரான ஆலத்தூரில் தனி நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெரம்பலூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த செஞ்சேரி முதல் திருச்சி-சென்னை நான்கு வழிச்சாலையை இணைக்கும் புறவழிச்சாலை விரிவாக்க திட்டப்பணிகளை உடனடியாக மேற்கொள்ள அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும் என்றும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை குறைக்க கோரியும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News