உள்ளூர் செய்திகள்

சமத்துவபுரம் உருவாக்கி வீடுகள் கட்டி தர மக்கள் கோரிக்கை

Published On 2022-08-09 09:36 GMT   |   Update On 2022-08-09 09:36 GMT
  • சமத்துவபுரம் உருவாக்கி வீடுகள் கட்டி தர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
  • அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெண்பாவூரை அடுத்த பெரிய வடகரை கிராமத்தை சேர்ந்த மக்கள் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது :-

பெரிய வடகரை கிராமத்தில் வசித்து வரும் 100-க்கும் அதிகமானோருக்கு மாவிலங்கை சாலையில் தலா 3 சென்ட் வீதம் இலவச வீட்டுமனைப்பட்டா, 2010-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது.

ஆனால் போதிய வருவாய் இல்லாததால் வீடு கட்ட முடியாத நிலையில் உள்ளோம். எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் சமத்துபுரத்தை உருவாக்கி தரமான வீடுகள் கட்டித்தர அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

Tags:    

Similar News