உள்ளூர் செய்திகள்

பயணியர் நிழற்குடையை புதுப்பிக்க கோரிக்கை

Published On 2023-03-20 08:39 GMT   |   Update On 2023-03-20 08:39 GMT
  • மேற்கூரை இரும்புகள் துரு பிடித்து ஆபத்தான நிலையில் உள்ளன
  • அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதி பெரியம்மாபாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணிகளின் வசதிக்காக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையின் மேற்கூரைகள் இரும்பினால் அமைக்கப்பட்டுள்ளதாலும், இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதாலும் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News