உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி

Published On 2023-08-18 12:23 IST   |   Update On 2023-08-18 12:23:00 IST
  • ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது
  • முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர்

பெரம்பலூர், வேப்பூர் சாரண மாவட்டங்களை சேர்ந்த சாரண ஆசிரியர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்ட சாரணர் பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந்த முகாமினை பெரம்பலூர் மாவட்ட சாரண முதன்மை ஆணையரும், முதன்மை கல்வி அலுவலருமான மணிவண்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் சாரண ஆசிரியர்களுக்கு சாரண இயக்கம் பற்றியும், இதன் மூலம் மாணவர்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும், அனைத்து பள்ளிகளிலும் சாரண இயக்கம் தொடங்கி மிக சிறப்பாக நடத்துமாறு ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News