உள்ளூர் செய்திகள்

புனித பனிமய மாதா ஆலய தேர்பவனி

Published On 2022-08-05 15:11 IST   |   Update On 2022-08-05 15:11:00 IST
  • புனித பனிமய மாதா ஆலய தேர்பவனி நடைபெற்றது
  • எம்.எல்.ஏ. பங்கேற்றார்

பெரம்பலூர்:

பெரம்பலூரில் புனித பனிமய மாதா ஆலய பெருவிழாவையொட்டி தேர்பவனி நடந்தது.

பெரம்பலூர் புனித பனிமய மாதா ஆலயத்தின் பெருவிழாவையொட்டி பெரம்பலூர் வட்டார முதன்மை பங்குகுரு ராஜமாணிக்கம் முன்னிலையில், கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி கடந்த 27-ந் தேதி கொடி ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து அமிர்தசாமி தலைமையில் கூட்டு பாடல் சிறப்பு திருப்பலி நடந்தது. தேர் பவனியாக செல்லக்கூடிய முக்கிய வீதிகளில் கொடி ஊர்வலம் நடந்தது.

விழா நாட்களில் தினமும் மாலையில் பல்வேறு திருத்தலங்களின் பங்கு குருக்களால் சிறப்பு பிரார்த்தனைகளும், திருப்பலிகளும் நடந்தது. பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று (4ம் தேதி) இரவு நடைபெற்றது.

இதில் பெரம்பலூர் வட்டார முதன்மை பங்குகுரு ராஜமாணிக்கம் முன்னிலையில், கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி தேர்பவனியை தொடங்கிவைத்தார். முக்கிய வீதிகளில் தேர்பவனி வந்தது. இதில் எம்.எல்.ஏ. பிரபாகரன் உட்பட கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். இன்று (5ம்தேதி) பெருவிழா முடிகிறது.புனித பனிமய மாதா ஆலய தேர்பவனி நடைபெற்ற போது எடுத்தப்படம்.

Tags:    

Similar News