உள்ளூர் செய்திகள்

கீழப்பெரம்பலூர், அகரம்சீகூர் பகுதிகளில் நாளை மின் தடை

Published On 2023-01-29 12:15 IST   |   Update On 2023-01-29 12:15:00 IST
  • கீழப்பெரம்பலூர், அகரம்சீகூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
  • நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே தேனூர் மற்றும் கீழப்பெரம்பலூர் துணை மின் நிலையங்களில் நாளை(திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. பராமரிப்பு பணி முடியும் வரை இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் புதுவேட்டகுடி, காடூர், நமங்குணம், கீழப்பெரம்பலூர், கோவில்பாளையம், துங்கபுரம், குழுமூர், ஆர்.எஸ்.மாத்தூர், கே.ஆர்.நல்லூர், அங்கனூர், அகரம்சீகூர், வயலூர், வயலப்பாடி, கிளியப்பட்டு ஆகிய கிராமங்களில் நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News