உள்ளூர் செய்திகள்

கீழுமத்தூரை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் மனு

Published On 2022-07-19 14:29 IST   |   Update On 2022-07-19 14:29:00 IST
  • கீழுமத்தூரை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
  • நெல்மணிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

பெரம்பலூர்

குன்னம் தாலுகா கீழுமத்தூரை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், அறுவடை செய்த நெல்மணிகளை சுமார் 4 மாதங்களுக்கு முன்பு நன்னை கிராமத்தில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஆன்லைனில் பதிவு செய்து 50 விவசாயிகள் காத்துக்கொண்டிருக்கிறோம். இதேபோல் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 200 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். ஆனால் அந்த கொள்முதல் நிலையத்தை மூடிவிட்டனர். இதனால் நெல்மணிகளை விற்பனை செய்ய காலதாமதம் ஆவதால் வங்கிகளில் விவசாயத்துக்காக வாங்கியிருந்த கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் தவித்து வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் பதிவு செய்யப்பட்ட எங்களது நெல்மணிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

Tags:    

Similar News