உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு

Published On 2023-06-13 12:17 IST   |   Update On 2023-06-13 12:17:00 IST
  • ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு அளிக்கப்பட்டது.
  • சாத்தனவாடி கிராம மக்கள் சார்பில் சக்திவேல் என்பவர் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார்.

பெரம்பலூர் :

வேப்பந்தட்டை தாலுகா, சாத்தனவாடி கிராம மக்கள் சார்பில் சக்திவேல் என்பவர் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், எங்கள் கிராமத்தில் பொது குடிநீர் கிணற்றை இடித்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்டு மீண்டும் குடிநீர் கிணறு வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 6 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறேன். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அந்த ஆக்கிரமிப்பை அகற்றி இடத்தை மீட்டு மீண்டும் குடிநீர் கிணறு வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

Tags:    

Similar News