உள்ளூர் செய்திகள்
பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியில்தேசிய அளவிலான ஜூடோ போட்டி
- தேசிய அளவிலான ஜூடோ போட்டி
- பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியில் தேசிய அளவிலான ஜூடோ போட்டி
பெரம்பலூர்,
தேசிய அளவிலான ஜூடோ போட்டிக்கு, தமிழ்நாடு ஜூடோ அணிகளுக்கான போட்டியானது பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியில் நடைபெற்றது. தமிழக அளவில் 684 மாணவ மாணவியர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். 14, 17, 19 வயது உட்பட்ட பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்கள், தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு பள்ளி கல்வி துறையின் மூலமாக பங்குபெற அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இதன் துவக்க விழாவிற்கு ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். விழாவில் நிறுவன துணைத்தலைவர் விவேகானந்தன் முதல்வர் கலைச்செல்வி, பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் உடற்கல்வி இயக்குநர்கள் பாலசுப்ரமணியன், மணி, பாஸ்கர் மற்றும் பல்வேறு பள்ளியை சார்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் பொறுப்பாசிரியர்கள் மாணவ,மாணவியர்கள் கலந்துக்கொண்டனர்.