உள்ளூர் செய்திகள்

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற மாற்றுத்திறனாளி வீரர், வேலை வழங்கக்கோரி மனு

Published On 2022-07-26 14:41 IST   |   Update On 2022-07-26 14:41:00 IST
  • பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற மாற்றுத்திறனாளி வீரர், வேலை வழங்கக்கோரி மனு அளித்தார்.
  • இந்திய அணிக்காக விளையாடி வெள்ளி பதக்கம்

பெரம்பலூர்:

குரும்பலூர் மெயின்ரோட்டை சேர்ந்த மோகனின் மகன் பார்த்தீபன். மாற்றுத்திறனாளியான இவர் பெரம்பலூர் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். எனது குடும்பத்தை கவனித்து கொள்ளும் கடமையில் உள்ளேன். நான் கடந்த 2019-ம் ஆண்டு பாரா ஒலிம்பிக்கில் கூடைப்பந்து போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி 2-ம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம், சான்றிதழ் பெற்றுள்ளேன். எனவே என்னுடைய தகுதிக்கேற்ப ஒரு வேலையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

Tags:    

Similar News