உள்ளூர் செய்திகள்

பாடாலூர் பகுதியில் நாளை மின் தடை

Published On 2022-08-07 08:03 GMT   |   Update On 2022-08-07 08:03 GMT
  • புதுக்குறிச்சி துணை மின் நிaலையத்தில் நாளை 8-ந்தேதி (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.
  • ஆலத்தூர் கேட், வரகுபாடி, தெரணி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது

பெரம்பலூர்:

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் உதவி செயற்பொறியாளர் ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :

புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை 8-ந்தேதி (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், சா.குடிக்காடு,

அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்கு மாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, தெரணி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News