உள்ளூர் செய்திகள்

வெங்காய குடோன் எரிந்து சேதம்

Published On 2022-06-26 08:04 GMT   |   Update On 2022-06-26 08:04 GMT
  • வெங்காய குடோன் எரிந்து சேதமானது
  • 60 மூட்டை சின்ன வெங்காயம் இருந்தது

பெரம்பலூர் :

பெரம்பலூர் அருகே லாடபுரத்தில் மர்ம நபர் தீவைத்ததால் வெங்காய குடோன் எரிந்து சாம்பலானது.

பெரம்பலூர் அருகே லாடபுரம் 1 வது வார்டு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி மகன் ரவி (வயது45). இவர் லாடபுரம் பஸ் ஸ்டாப் அருகில் கீத்துக் கொட்டாயால் ஆன வெங்காய குடோன் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அதிகாலை 2 மணி அளவில் குடோன் தீப்பற்றி எரிந்து. தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மேலும் தீபாரவாமல் தடுத்து அனைத்தனர்.

இந்த வெங்காய குடோலின் 60 மூட்டை சின்ன வெங்காயம் இருந்தது. 2 தராசுகள் மற்றும் 100 காலி சாக்குகள் எல்லாம் தீயில் கருகின. தீ விபத்தால் ஒரு லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டது. இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து தீவைத்த மர்ம நபரை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News