உள்ளூர் செய்திகள்

ஓடும் பஸ்சில் முதியவர் சாவு

Published On 2023-02-09 07:16 GMT   |   Update On 2023-02-09 07:16 GMT
  • ஓடும் பஸ்சில் முதியவர் திடீரென இறந்தார்.
  • சின்னசாமி பஸ்சின் பின்படிக்கட்டில் அமர்ந்து வாந்தி எடுத்து கொண்டிருந்தவர், திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பாண்டகபாடி காலனி தெருவை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 60). இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெறுவதற்கு நேற்று காலை பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்றார். பின்னர் மீண்டும் அவர் சொந்த ஊர் செல்வதற்கு பெரம்பலூா் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு அரசு டவுன் பஸ்சில் ஏறி பயணம் செய்தார்.

பஸ் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கோனேரிபாளையத்தை கடந்து சோமண்டாபுதூர் பிரிவு சாலை அருகே சென்ற போது சின்னசாமிக்கு வாந்தி, மயக்கம் வருவதாக சக பயணியிடம் கூறியுள்ளார்.இதனால் பஸ்சை டிரைவர் நிறுத்தினார். இதையடுத்து சின்னசாமி பஸ்சின் பின்படிக்கட்டில் அமர்ந்து வாந்தி எடுத்து கொண்டிருந்தவர், திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

அவரை சிகிச்சைக்கு அழைத்து செல்வதற்காக சக பயணிகள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆம்புலன்சு மருத்துவ உதவியாளர் சின்னசாமியை பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து தகவலறிந்த சின்னசாமியின் மகன் நாகராஜன் தனது தந்தை உடல்நிலை சரியில்லாமல் தான் இறந்துவிட்டார் என்று கூறியதன் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் எழுதி வாங்கி கொண்டு சின்னசாமியின் உடலை அவரிடம் ஒப்படைத்தனர்.


Tags:    

Similar News