உள்ளூர் செய்திகள்
- வாகனம் மோதி மூதாட்டி பலியானார்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த மூதாட்டி யார்? எந்த ஊரைச் சோ்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தேனூரில் இருந்து எதுமலை செல்லும் சாலையில் ஒரு வயல் அருகே நேற்று முன்தினம் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தலை நசுங்கி உயிரிழந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மூதாட்டி சாலையை கடந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அவர் உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அந்த மூதாட்டி சிகப்பு, வாடாமல்லி நிற சேலை அணிந்திருந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த மூதாட்டி யார்? எந்த ஊரைச் சோ்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.