பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை கல்லூரியில் புதுமுக வரவேற்பு விழா
- பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை கல்லூரியில் புதுமுக வரவேற்பு விழா நடைபெற்றது
- விழாவில் மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) புதுமுக வரவேற்பு விழா மற்றும் மாணவிகள் பொறுப்பு ஏற்கும் விழா நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் உமாதேவி பொங்கியா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் வேந்தர் சீனிவாசன் சிறப்பு விருந்தினர் தன்னம்பிக்கை பேச்சாளர் முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனுக்கு பொன்னாடைப் அணிவித்து நினைவு பரிசினினை வழங்கினார்.
தொடர்ந்து கல்லூரி செய்தி மடலை வெளியிட்டார். அதனை சிறப்பு விருந்தினர் பெற்றுக் கொண்டு பேசினார். இதனைத் தொடர்ந்து மாணவிகளின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். தோல்விகளை கண்டு துவண்டு விடாது அதனை படிக்கற்களாக நினைத்து முன்னேறவேண்டும் என கூறி உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. நிறைவாக ஆங்கிலத்துறை முதலாம் ஆண்டு மாணவி ஸ்ரீநிதி நன்றியுரை கூற மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் முதல்வர், புலமுதன்மையர், துறைத்தலைவர்கள், பேராசியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துக்கொண்டனர்.