குன்னத்தில் புதிய அரசு மருத்துவ கல்லூரி
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
- பஸ் ஸ்டாப் திறந்து வைத்தபின்னர் அளித்த பேட்டியில் மருத்துவ கல்லூரி கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குன்னம் பேருந்து நிறுத்த புதிய கட்டடம் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினரின் உற்பத்தி பொருட்கள் விற்பனை அரங்குகளையும், குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் ஆகியவற்றையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என தெரிவித்தார்.விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொ ய்யாமொழி,மாவட்ட ஆட்சியர் க.கற்பகம்,சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் ,சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி, கோட்டாட்சியர் நிறைமதி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.