உள்ளூர் செய்திகள் (District)

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலி

Published On 2023-03-03 06:07 GMT   |   Update On 2023-03-03 06:07 GMT
மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலியானார்

பெரம்பலூர் :

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கள்ளப்பட்டியை சேர்ந்தவர் சிதம்பரம் மகன் கோபி (வயது 23). இவர் கடந்த 28-ந் தேதி கள்ளபட்டியில் இருந்து கீரிப்பாளையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் சென்றதால் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில் கோபி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கோபி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News