உள்ளூர் செய்திகள்
மகள் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை
- மகள் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
- இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா மங்களமேட்டை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி தையல்நாயகி (வயது 45). இவருடைய மகள் ரேஷ்மா (14). இவர் தோல் அலர்ஜி நோய் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். இதில், மனவேதனை அடைந்த தையல்நாயகி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தையல்நாயகியின் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.