உள்ளூர் செய்திகள்

மனவிரக்தியில் தாய் தற்கொலை

Published On 2022-07-09 14:45 IST   |   Update On 2022-07-09 14:45:00 IST
  • மனவிரக்தியில் தாய் தற்கொலை செய்து ெகாண்டார்.
  • வருவாய் கோட்டாட்சியர் விசாரணை

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளப்பாடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 20) இருவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததிலிருந்து விஜயலட்சுமி தனது குழந்தைக்கு புகட்ட தாய்ப்பால் சுரக்கவில்லையாம்.

சில தினங்கள் காத்திருந்தும் தாய்ப்பால் சுரக்காததால் மனம் உடைந்த விஜயலட்சுமி கடந்த 1ம் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.

இதை அறிந்த உறவினர்கள் உடனடியாக விஜயலட்சுமியை அரியலூர், பெரம்பலூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் விஜயலட்சுமி இறந்தார்.

இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை தகவலின் பேரில் குன்னம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விஜயலட்சுமியின் கணவர் கருப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்கு பதிவு செய்தும், விஜயலட்சுமிக்கு திருமணம் ஆகி 1 வருடங்களே ஆகின்ற காரணத்தால் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி விசாரணைக்கும் பரிந்துரை செய்தார். அதன் பேரில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றார். இச்சம்பவம் குறித்து கொளப்பாடி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News