உள்ளூர் செய்திகள்

மாரியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2022-07-20 14:18 IST   |   Update On 2022-07-20 14:18:00 IST
  • மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
  • காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வடடம் பிலிமிசை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 5-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி 11-ந் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, தினமும் இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், பூஜைகளுக்கு பிறகு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். பின்னர், அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேதர் மலைியில் நிலையை அடைந்தது.

Tags:    

Similar News